தமிழ்நாடு

விம்கோ நகர் - விமான நிலைய மெட்ரோ சேவை சீரானது!

DIN


விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சீரானது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.

பச்சை வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. இதேபோன்று விம்கோ நகர் - விமான நிலையம் இடையிலான நீல நிற வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இரு மார்க்கத்திலும் ரயில்கள் தற்போது இயங்க ஆரமித்துள்ளன. பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணங்களை திட்டமிட்டுக்கொள்ள கோரப்படுகின்றார்கள். சிரமத்திற்கு வருந்துகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் லூப் முறையில் இயக்கப்பட்டன. தற்போது கோளாறு சரி செய்யப்பட்டதால், மெட்ரோ சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT