முகப்பு
தமிழ்நாடு

விம்கோ நகர் - விமான நிலைய மெட்ரோ சேவை சீரானது!

விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சீரானது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
கோப்புப் படம்
பகிர்:


விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சீரானது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.

பச்சை வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. இதேபோன்று விம்கோ நகர் - விமான நிலையம் இடையிலான நீல நிற வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இரு மார்க்கத்திலும் ரயில்கள் தற்போது இயங்க ஆரமித்துள்ளன. பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணங்களை திட்டமிட்டுக்கொள்ள கோரப்படுகின்றார்கள். சிரமத்திற்கு வருந்துகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் லூப் முறையில் இயக்கப்பட்டன. தற்போது கோளாறு சரி செய்யப்பட்டதால், மெட்ரோ சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →