மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 66.51அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை தனிந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,771 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,030 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க | டிச. 3- இல் உருவாகும் ‘மிக்ஜம்’ புயல்:வட தமிழகம் - தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்கும்
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.77 டிஎம்சியாக உள்ளது.