முகப்பு
தமிழ்நாடு

மிக்ஜம் தாண்டவம்! - புகைப்படங்கள்

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 4 டிசம்பர் 2023, 4:35 pm IST
பகிர்:

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால், சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரி மற்றும் கடலோரப் பகுதிகளில் மழையளவு அதிகமாக காணப்படுகிறது.

பல பகுதிகளில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பெரம்பூரில் காருக்குள் மழைநீர் புகுந்ததால் சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர் எக்ஸ் தளத்தில் உதவி கேட்டு பதிவிட்டார்.

தாம்பரம் அரசு மருத்துவமனையில்..

உடனடியாக, அதற்கு காவல்துறையினர் பதிலளித்ததுடன் தான் வேகமாக  மீட்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.