தமிழ்நாடு

இன்று வந்தே பாரத் உள்பட 15 ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் 15 ரயில்கள் வியாழக்கிழமை (டிச.8) ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் 15 ரயில்கள் வியாழக்கிழமை (டிச.8) ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, மைசூரு வந்தே பாரத், சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை சதாப்தி, விஜயவாடா ஜன் சதாப்தி, சென்னை எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு வந்தே பாரத் (இருமாா்க்கம்), பெங்களூரு டபுள் டக்கா், பெங்களூரு பிருந்தாவன், சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில்கள் உள்பட 15 ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மங்களூரு, போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில்களும் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத் நவ்ஜீவன் விரைவு ரயில், திருவனந்தபுரம், மங்களூரு அதிவிரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

வாக்குச்சாவடி  நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT