6 சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடல்: சென்னை மாநகராட்சி
சென்னையில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட 6 சுரங்கப் பாதைகளில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, ரங்கராஜபுரம், மாணிக்கம் நகர், கணேசபுரம், கெங்குரெட்டி, வில்லிவாக்கம், வியாசார்பாடி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.