கோப்புப் படம் 
தமிழ்நாடு

நிவாரணப் பணிக்காக வந்தவர் விபத்தில் பலி: ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி

DIN


சென்னை: மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணியினை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி சென்னைக்கு வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஜெயபால்மூர்த்தி குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடியாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் முருகானந்தத்திற்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT