கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு!

மிக்ஜம் புயலின் போது பெய்த கனமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

DIN

மிக்ஜம் புயலின் போது பெய்த கனமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் மொத்த விற்பனை அங்காடியான கோயம்பேடு சந்தையில் தக்காளி மட்டுமின்றி அவரை, இஞ்சி உள்பட பல்வேறு காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.55, தக்காளி ரூ.35, இஞ்சி ரூ.90, அவரை ரூ.50 வரை விற்கப்படுகிறது. வரத்து சீரானதும் ஓரிரு நாள்களில் காய்கறிகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT