தமிழ்நாடு

சென்னையில் 19 இடங்களில் மட்டும் மழைநீர் அகற்றப்படவில்லை- அமைச்சர் கே.என்.நேரு  

சென்னையில் 19 இடங்களில் மட்டும் மழைநீர் அகற்றப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

DIN

சென்னையில் 19 இடங்களில் மட்டும் மழைநீர் அகற்றப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இரவு பகலாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. சென்னை நகரம் கிட்டதட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.

குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 400க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் 6 இடங்களில் மட்டும்தான் வகுப்பறைகள் தூய்மை செய்யப்படவில்லை. 

கழிவறைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் வந்த 2,500 பணியாளர்கள் சென்னையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிச.11 திங்கட்கிழமைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.6,000 கொடுப்பதை மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT