முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை!
கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை!
கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'இது ஜனநாயக விரோதம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி ஆகியோர் முதல்வருடன் பேசியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.