தமிழ்நாடு

திருச்சியில் கட்டட தொழிலாளி அடித்துக் கொலை

திருச்சியில் கட்டட தொழிலாளி ஒருவர் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

DIN

திருச்சி: திருச்சியில் கட்டட தொழிலாளி ஒருவர் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் குணசேகர்  (55).கட்டடத் தொழிலாளியான (கொத்தனார்) இவருக்கு, ராணி என்ற மனைவியும்,விஜயகுமார்,
தர்மா என்ற இரு மகன்களும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி, குழந்தைகளையை பிரிந்து தனியாக வசித்து வந்தார் குணசேகர்.

மது பழக்கத்திற்கு அடிமையான அவர்  மதுபோதையில்  ஆங்காங்கே கண்ட இடங்களிலும்,சாலை ஒரத்திலும் உறங்குவது வழக்கம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குணசேகர்,உறையூர் ராமலிங்க நகர் அருகே சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் நண்பர்கள் குணசேகரை சரமாரியாக கைகள் மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் அடிபட்ட குணசேகரனை, நண்பர்கள் அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர்.

திங்கள்கிழமை காலை வந்து பார்த்தபோது குணசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் போலீசார் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT