தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
கடந்த இரு தினங்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!