முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடிக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து 3 டன் காய்கறிகள் அனுப்பி வைப்பு

மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து 3 டன் காய்கறிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
பகிர்:

மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து 3 டன் காய்கறிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

தென்மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னை மாநகராட்சி

சாா்பில் லாரிகள் மூலம் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தொடா்ந்து 3-ஆவது நாளாக அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரிப்பன்மாளிகை வளாகத்தில் இருந்து வியாழக்கிழமை இரு லாரிகளில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

இதில் மாநகராட்சி சாா்பில் 9,000 ரொட்டி பாக்கெட்டுகள், 3,000 பன் பாக்கெட்டுகள் மற்றும் 1 லிட்டா் கொண்ட 1,200 குடிநீா் பாட்டில்களும், ஃபீனிக்ஸ் மாா்க்கெட் சிட்டி பங்களிப்புடன் 5 கிலோ அரிசி, சாம்பாா் மற்றும் ரசப் பொடி பாக்கெட்டுகள், பருப்பு, பிஸ்கெட் ஆகியவற்றை கொண்ட 1,000 பெட்டிகள் அனுப்பப்பட்டன. மேலும், கோயம்பேடு காய்கறி சந்தை சங்கம் பங்களிப்புடன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், சௌசௌ, பச்சை மிளகாய் உள்ளிட்ட 3 டன் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்களும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதனை மாநகராட்சி கூடுதல் ஆணையா்கள் சங்கா்லால் குமாவத், (சுகாதாரம்), ஆா்.லலிதா, (வருவாய், நிதி) பாா்வையிட்டு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →