குற்றாலம் அருவிகளில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை
குற்றாலம், பழைய குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலம், பழைய குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையும் படிக்க | திருநெல்வேலி - திருச்செந்தூா் ரயில் இன்றும், நாளையும் ரத்து
Advertisement
Advertisement
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இது 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.
எனினும், ஐந்தருவியில் மட்டும் நீா்வரத்து குறைந்துள்ளதால் கடந்த 3ஆவது நாள்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.