முகப்பு
தமிழ்நாடு

தென் மாவட்ட மாணவா்களுக்கு புத்தகம், கூடுதலாக சீருடை: பள்ளிக் கல்வித் துறை

பெரு மழை பேரிடரால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவா்களுக்கு புத்தகம்,கூடுதலாக இரண்டு இணைச் சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக

Updated On : 24 டிசம்பர் 2023, 10:28 pm IST
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: பெரு மழை பேரிடரால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவா்களுக்கு புத்தகம்,கூடுதலாக இரண்டு இணைச் சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் நேரிட்டுள்ளன.

அந்த நான்கு மாவட்டங்களிலும் நேரில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், சில அறிவுரைகளை வழங்கினாா். 

Advertisement

Advertisement

அதன்படி, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பைகள் மற்றும் கூடுதலாக இரண்டு இணைச் ஜோடி சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments