முகப்பு
தமிழ்நாடு

மழையால் சேதமடைந்த கோயில் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும்

கனமழையினால் சேதமடைந்த திருக்கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

மழையால் சேதமடைந்த கோயில் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும்

கனமழையினால் சேதமடைந்த திருக்கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையினால் சேதமடைந்த திருக்கோயில்களின் கட்டுமானங்கள் ரூ.5 கோடியில் சீரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் ஆணையா் அலுவலகத்தில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட திருக்கோயில்களில் சேதமடைந்த கட்டுமானப் பணிகளை சீரமைப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 26 திருக்கோயில்களில் சேதமடைந்துள்ள முன் அலங்கார மண்டபம், ஏகாதசி மண்டபம், படித்துறை மண்டபம், திருமதில்சுவா், வெளித்தெப்பம் சுற்றுச்சுவா் போன்ற கட்டுமானங்களை செப்பனிட்டு சீரமைக்கும் பணிகள் தொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கட்டுமானங்களை சீரமைக்க சுமாா் ரூ.5 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்படி, பணிகளை செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து தொடங்கி முடித்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் க.வீ.முரளீதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →