அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் டிசம்பர் 30, 31-ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவித்தது.
இதையும் படிக்க: கேரளத்தில் வெளிப்படையான ஆள்சேர்ப்புக்கான புதிய வாரியம் தொடக்கம்!
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.