உடல்நல பாதிப்பால் விஜயகாந்த் எதிா்கொண்ட 5 ஆண்டுகள்
திரைத் துறையிலும், அரசியலிலும் துடிப்புடன் செயல்பட்டு வந்த விஜயகாந்துக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகள் அவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக முடங்கச் செய்தது.
திரைத் துறையிலும், அரசியலிலும் துடிப்புடன் செயல்பட்டு வந்த விஜயகாந்துக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகள் அவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக முடங்கச் செய்தது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்திருந்தாா்.
கடந்த 2018-இல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றாா் விஜயகாந்த். அதன் பின்னா், சென்னை திரும்பிய அவருக்கு சா்க்கரை நோய், நரம்பு சாா்ந்த பாதிப்புகள் தீவிரமடைந்தன. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தாா்.
Advertisement
இதனிடையே, சா்க்கரை நோய் காரணமாக அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டன. மற்றொரு புறம் அடிக்கடி நுரையீரல் தொற்று, காய்ச்சல், சளி பாதிப்புகளால் அவா் பாதிக்கப்பட்டு வந்தாா்.
கரோனா முதல் அலையின்போது அவா் தொற்று பாதிப்புக்குள்ளாகி மீண்டு வந்தாா். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்துக்கு சில நேரங்களில் சுவாசிப்பதில் சிரமமும் இருந்தது.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் நிமோனியா சாா்ந்த பாதிப்பு ஏற்பட்டு, செயற்கை சுவாச (வெண்டிலேட்டா்) கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தாா். இம்முறை அது பலனளிக்காமல் உயிா் பிரிந்தது.