பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் கைது
பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பாட்னா விமான நிலையத்திலிருந்து தில்லி செல்லவிருந்த நபரின் பையை மத்திய பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணியின் பையிலிருந்து மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பாட்னா விமான நிலைய காவல் ஆய்வாளர் கூறினார்.
Advertisement
Advertisement
அந்த நபர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பாட்னா விமான நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.