பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் கைது
பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பாட்னா விமான நிலையத்திலிருந்து தில்லி செல்லவிருந்த நபரின் பையை மத்திய பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணியின் பையிலிருந்து மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பாட்னா விமான நிலைய காவல் ஆய்வாளர் கூறினார்.
Advertisement
Advertisement
அந்த நபர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பாட்னா விமான நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.