தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

DIN

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  மணிகண்டன்(40). இவர் ஜெய்ஹிந்தபுரம் அருகே உள்ள எம்.கே புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர்  இந்து மக்கள் கட்சியில் தென்மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் நேற்றிரவு கடைக்கு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல் மற்றும் அறிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன்  மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்தபுரம்  காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசியல் காரணங்களுக்காக படுகொலை நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா  என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT