தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர் தென்னரசுதான்: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

DIN


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக இபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு தொடர்வார் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு மூலம் பொதுவான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதிமுக வேட்பாளராக தென்னரசு தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தென்னரசுவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவும் தமிழ்மகன் உசேன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்படும் ஒப்புதல் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை காரணம் காட்டி இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது. 

அதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ஈரோடு இடைத்தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பொதுக்குழு கூட்டி பேசி முடிவெடுக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT