ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை
அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.