சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலைக் கைப்பற்றி கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க.. போர்த்துகலில் 5,000 சிறார்களிடம் பாதிரியார்கள் பாலியல் அத்துமீறல்!
சென்னை ஐஐடியின் விடுதியில் தங்கிப் படித்துவந்த ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.