ஈரோடு கிழக்கு வாக்காளர் பட்டியலில் முறைகேடு? தேர்தல் ஆணையம் அதிரடி
ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள 40,000 வாக்காளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கவில்லை என்றும் சுமார் 8,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருமுறை இடம்பெற்றிருப்பதாகவும் அதிமுக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சத்யபிரதா சாகுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாக்காளர்களின் விவரங்கள் கசிந்தது தொடர்பாகவும் தேர்தல் விளக்கம் கேட்டுள்ளது.