தமிழ்நாடு

குடியரசுத் தலைவரின் நீலகிரி பயணம் ரத்து 

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக நேற்று தமிழகம் வருகை புரிந்தார். மதுரை மீனாட்சியை தரித்த அவர் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவிலும் பங்கேற்றாா். 

இதையடுத்து குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஹெலிகாப்டா் மூலம் குடியரசுத்தலைவர் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

குன்னூரில் மேகமூட்டம், சாரல் மழை போன்ற மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT