முகப்பு
தமிழ்நாடு

திருச்சி: காவலரை வெட்டிய ரெளடிகள் மீது துப்பாக்கிச் சூடு!

திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரெளடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 20 பிப்ரவரி, 2023 at 3:21 PM
பகிர்:

திருச்சி: திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரெளடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள் துரைசாமி மற்றும் சோமசுந்தரத்தை காவல்துறையினர் இன்று திருச்சியில் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே தப்பிக்க முயற்சித்துள்ளனர். இவர்களை தடுக்க முயன்ற காவலர் சிற்றரசுவை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

Advertisement

இதையடுத்து, இரண்டு ரெளடிகளையும் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர். கை மற்றும் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இரு ரெளடிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.