முகப்பு
தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்

தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார்.

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95), பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு கொண்டு செல்லபட்டு அங்கு காலமானார். 

அவருக்கு ஓ.பன்னீர்செல்வம், ஓ.ராஜா, ஓ.சண்முகசுந்தரம், ஓ.சுசேந்திரன், ஓ.பாலமுருகன் என 5 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்கு, பெரியகுளத்தில் சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →