தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.