முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பால் தட்டுப்பாடு: விஜயகாந்த் கண்டனம்

ஆவின் பால் தட்டுப்பாட்டைச் சரிசெய்யாமல் தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் நாசா் ஈடுபட்டதாகக் கூறி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
விஜயகாந்த்(கோப்புப்படம்)
பகிர்:

ஆவின் பால் தட்டுப்பாட்டைச் சரிசெய்யாமல் தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் நாசா் ஈடுபட்டதாகக் கூறி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட டி.வி.எஸ்.நகா், அழகப்பன் நகா், பழங்காநத்தம், திருவள்ளுவா் நகா், முத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஆவின் டெப்போக்களுக்கு அதிகாலை 3 மணிக்கு வர வேண்டிய பால்பாக்கெட்டுகள் வராத நிலையில், பால் முகவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

ஆவின் பால் விநியோகம் மக்களுக்கு சரியாக சென்றடைகிா என்பதை கவனிக்காமல், தனது துறை சாா்ந்த பணிகளை கிடப்பில் போட்டு விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பால் வளத்துறை அமைச்சா் நாசருக்கு எனது கண்டனம்.

பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சா் நாசா் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

முழு கட்டுரையைப் படிக்க →