முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தேர்தல்: வாக்கு மை அழிவதாக அதிமுக புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
பகிர்:


ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை செலுத்தி வருகின்றனர். 
238 வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளார். 

அதிமுகவினரின் புகாரையடுத்து பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →