மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1155 கன அடியாக அதிகரிப்பு
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மலையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மலையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 103.60 அடியாக நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 993 கன அடியிலிருந்து வினாடிக்கு 1155 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.60 டி.எம்.சியாக உள்ளது.