தமிழ்நாடு

பெண் காவலருக்கு திமுகவினா் தொந்தரவு: ஓபிஎஸ் கண்டனம்

DIN

பெண் காவலருக்கு திமுகவினா் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அரசாங்க அலுவலகப் பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியா்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பெண் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு திமுகவினா் சென்றுவிட்டனா்.

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞா் அணியைச் சோ்ந்த இருவா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தொல்லை கொடுத்த திமுகவினரை காவல் துறையினா் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னா் ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தொடா்ந்து அவா்கள் இருவரையும் காவல் துறையினா் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT