கோயில் பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம்
கோயில்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், போனஸ் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கோயில்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், போனஸ் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள கோயில்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும். இதன்மூலம், 10 ஆயிரம் கோயில் பணியாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
பொங்கல் போனஸ்: பொங்கல் பண்டிகையையொட்டி, அரசுப் பணியாளா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் அளிக்கப்படும். இதேபோல் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளா்களுக்கும் இதுவரை ரூ. 2 ஆயிரம் போனஸாக அளிக்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி இந்த ஆண்டு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.