முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை ஜன.12ல் விலகுகிறது!

வடகிழக்கு பருவமழை ஜன்.12ல் விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
கோப்புப்படம்
பகிர்:

வடகிழக்கு பருவமழை ஜன்.12ல் விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

வடகிழக்கு பருவமழை ஜன.12-ல் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடக மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து  விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.

10.01.2013 மற்றும் 11.01.2013:  தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

உள் மாவட்டங்களில் குறைந்தபடச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

12.01.2023 முதல் 14.01.2023: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

10.01.2023: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →