முகப்பு
தமிழ்நாடு

காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்பு 

காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்கப்பட்டு அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்கப்பட்டு அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது. 

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும் உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்கப்பட்டு அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →