தமிழ்நாடு

கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம்!

பொங்கல் நாளில் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தார்.

DIN

காரைக்கால்: பொங்கல் நாளில் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி குடும்பத்துடன் சனிக்கிழமை இரவு காரைக்கால் வந்தார். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்திவிட்டு, திருநள்ளாறு தங்கும் விடுதியில் இரவு தங்கியிருந்தார்.

பொங்கல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் கோயிலுக்குச் சென்ற அவர், மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை மற்றும் ஸ்ரீ தியாகராஜர் சந்நிதிகளில் வழிபாடு செய்தார். தனி சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு தைலாபிஷேகம் மற்றும் கருப்பு வஸ்திரம் உள்ளிட்ட மலர் மாலைகளுடன் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். சந்நிதியிலேயே தில தீபம் ஏற்றினார்.

சிவாச்சாரியர்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து பிரசாதம் வழங்கினர். பொங்கல் நாளில் பக்தர்கள் கணிசமாக தரிசனம் செய்துவரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரின் வருகையொட்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலம் பதில் சொல்லும்: முதல்வர் போட்டியில் சிவக்குமார்?

சிதம்பரத்தில் பிப்.13-இல் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்!

அஜீத் பவாரின் மரணம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: ரோகித் பவார்

2026-ஆம் ஆண்டு விஷ்ணுபதி புண்ணிய கால நாள்கள்!

ராமேஸ்வரம்: அஜீத் பவார் அஸ்தி அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது!

SCROLL FOR NEXT