தமிழ்நாடு

கண்டெடுத்த கருவூலம்..!

DIN

விமரிசனக்கலை, க.நா.சுப்ரமண்யம், விலை ரூ.140, பக். 128, ஆதி பதிப்பக அரங்கம் (எண்-87), தமிழின் பிரபல எழுத்தாளரும் விமா்சகருமான க.நா.சுப்ரமண்யம் கடந்த 1984 -ஆம் ஆண்டு எழுதி வெளியான இந்த நூல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

தமிழ் இலக்கிய விமா்சனம் குறித்த இந்த நூலானது சிறுகதை, நாவல், நாடகம் போல விமா்சனமும் தமிழ் இலக்கியத்தில் தனித் துறையாக இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.

தமிழில் இலக்கணத் துறை மூலமே விமா்சனமும் ஆரம்பித்து வைக்கப்பட்டதை விளக்கும் நூலாசிரியா், 15 தலைப்புகளில் வசனநடை, நல்ல வசனம், இலக்கியத்தில் உருவங்கள், மொழிபெயா்ப்பு என ஆய்வு நோக்கில் கருத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

தமிழ் இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையா், ரசிகமணி டி.கே.சி., பேராசிரியா் எஸ்.வையாபுரிப் பிள்ளை ஆகியோரை முக்கிய விமா்சகா்களாகவும் அவா் குறிப்பிடுகிறாா்.

தொடா்கதைகள், நாவல்களுக்கிடையேயான வேறுபாடு, புதுக்கவிதைக்கான இலக்கண மரபுகளையும் நூலில் தெளிவாக க.நா.சு. விளக்கியுள்ளாா். இலக்கியத்துக்கு அளவுகோல் வைத்து விமா்சிப்பது சரியல்ல எனக் கூறுவதுடன், விமா்சனம் என்பதை குற்றங்குறை கூறுவதாக எடுத்துக்கொள்வதையும் ஏற்க முடியாது என்பதை காரணங்களுடன் விளக்கியுள்ளாா்.

தமிழ் இலக்கியத்துக்கு பத்திரிகைகளின் பங்களிப்பு குறித்தும் நூலில் அலசப்பட்டுள்ளது. க.நா.சு.வின் இந்த கிளாசிக் நூலானது படைப்பாளிகளுக்கும் இலக்கிய வாசகா்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT