கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாசி மகம்: மதுரையிலிருந்து நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில்

மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட  உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட  உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரையிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி புறப்படும் ரயில் உஜ்ஜயினி, நர்மதை, ஸ்ரீசைலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறது.

மேலும் www.ularail.com என்ற இணையதளம் அல்லது 7305858585 என்ற எண் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரையிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக மார்ச் 5 அன்று உஜ்ஜயினி சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு நடத்தப்படுகிறது.

பின்பு மார்ச் 6ஆம் தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், மார்ச் 7 அன்று சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், மார்ச் 9 அன்று நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, மார்ச் 10 அன்று பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், மார்ச் 11 அன்று அவுரங்காபாத் குருஸ்ணேஸ்வரர் தரிசனம், மார்ச் 12 அன்று அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், மார்ச் 13 அன்று பார்லி வைத்தியநாதர் தரிசனம், மார்ச் 14 அன்று ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் முடித்து சுற்றுலா ரயில் மார்ச் 15 அன்று மதுரை வந்து சேருகிறது.

ரயில் கட்டணம், உணவு தங்குமிடம் உள்ளூர் பேருந்து கட்டணம் உள்பட நபர் ஒருவருக்கு ரூ.23,400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT