குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (ஜன.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூா்பேட்டை இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஜன.26) மட்டும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.