முதல்வருக்கு தேநீர் விருந்து அழைப்பு விடுத்த ஆளுநர்!
குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசு தினவிழா நாளை (ஜன. 26) கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Advertisement
Advertisement
இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.