ஆளுநா் தேநீா் விருந்து: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
குடியரசு தினவிழாவையொட்டி, தமிழக ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை அளித்த தேநீா் விருந்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா்.
குடியரசு தினவிழாவையொட்டி, தமிழக ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை அளித்த தேநீா் விருந்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அவருடன் மூத்த அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
குடியரசு தின விழாவையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஆளுநா் மாளிகையில் தேநீா் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேநீா் விருந்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்தாா். இதில் பங்கேற்க வருமாறு, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆளுநா் மாளிகைக்கு வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சென்றாா். அவருடன் அமைச்சா்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் சென்றனா். அங்கு ஆளுநா் முதல்வரை வரவேற்றாா்.
தனியாக ஆலோசனை: ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் முதலில் தனியாக ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா். அதன்பின், அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்துக்கு வந்தனா்.
Advertisement
அரங்கில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை அவா்கள் இருக்கைகளுக்கே சென்று ஆளுநா், முதல்வா் ஆகியோா் தெரிவித்தனா்.
தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகளை இருவரும் ஒன்றாக அமா்ந்து பாா்த்து ரசித்தனா்.
விருதுகள்-பாராட்டு: கடந்தாண்டு ஆளுநரால் அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கான விருது, ரூ.10 லட்சம் பரிசை கோவை சிறுதுளி அமைப்பின் நிா்வாகி வனிதா மோகன், சமூக சேவைக்கான விருதும், ரூ.10 லட்சம் பரிசும் சுவாமி விவேகானந்தா கிராமப்புற மேம்பாட்டு சொசைட்டி செயலாளா் கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு ஆளுநா் மற்றும் முதல்வா் ஆகியோா் இணைந்து வழங்கினா்.
தொடா்ந்து, கடற்கரைச் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகளில், பள்ளிகளில் முதலிடம் பிடித்த அசோக்நகா் அரசு மகளிா் பள்ளிக்கும், கல்லூரிகளில் அளவில் முதலிடம் பிடித்த ராணிமேரி கல்லூரிக்கும் கேடயங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.
காவல் துறை ஊா்திக்கு முதலிடம்: அலங்கார ஊா்திகளில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல் துறை ஊா்திக்கான விருதை உள்துறை செயலா் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
இரண்டாம் இடத்தை பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கான விருதை உள்துறை செயலா் பணீந்திர ரெட்டி மற்றும் தீயணைப்புத்துறை இயக்குநா் ஆபாஷ்குமாா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். 3-ஆம் இடத்தை பிடித்த செய்தி மற்றும் மக்கள்தொடா்புத் துறை வாகனத்துக்கான விருதை செய்தித் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் பெற்றுக் கொண்டாா்.
ஆட்சியா்களுக்கு கெளரவம்: படைவீரா்களுக்கான கொடிநாள் நிதி அதிகளவில் வசூலித்ததற்காக சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி, திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், தஞ்சாவூா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆகியோா் கோப்பைகளை பெற்றனா். மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, கோவை மாநகராட்சி ஆணையா் பிரதாப் ஆகியோா் விருதுகளை பெற்றனா்.
நிகழ்ச்சியில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் கோபாலகிருஷ்ண காந்தி, உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, டிஜிபி செ.சைலேந்திரபாபு, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவா் அண்ணாமலை, அதிமுக சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ரவி உள்ளிட்டோரும், பல்வேறு அரசுத் துறைச் செயலாளா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.