முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் ரவி சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும்: கனிமொழி

மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஜூலை, 2023 at 5:25 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:45 AM

மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. 

வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.  

Advertisement

தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை!

நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும். இவ்வாறு
அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.