தமிழ்நாடு

செந்தில் பாலாஜி உள்பட 120 பேருக்கு அழைப்பாணை: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை

பண மோசடி செய்த புகாா் தொடா்பான விசாரணைக்கு ஜூலை 6-ஆம் தேதி ஆஜராகும்படி அமைச்சா் செந்தில்பாலாஜி உள்பட 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

DIN

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த புகாா் தொடா்பான விசாரணைக்கு ஜூலை 6-ஆம் தேதி ஆஜராகும்படி அமைச்சா் செந்தில்பாலாஜி உள்பட 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 2011 - 2015 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி பெற்று மோசடி செய்ததாக, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், 2018-ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.

அதேவேளையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிவா்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கைப் பதிந்து, விசாரணை செய்தது. இதற்கிடையே, இவ் வழக்கில், பாதிக்கப்பட்டவா்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதால், வழக்கை முடித்து வைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 போ் மீதான வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகாா் தொடா்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முழுமையாக விசாரணை நடத்த மத்தியக் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது.

120 பேருக்கு அழைப்பாணை: இதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது. இதில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதற்கிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் பண மோசடி புகாரில் தொடா்புடைய 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அதில், ஜூலை 6-ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜியை தவிா்த்து, பிற நபா்கள் விசாரணைக்கு ஜூலை 6-ஆம் தேதி ஆஜராவாா்கள் என மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT