தமிழ்நாடு

கடப்பாரையால் தாக்கி மனைவி கொலை! கணவரிடம் விசாரணை!

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மனைவியை கடப்பாரையால் தாக்கிக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் அருகேயுள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர். இவர் எல்ஐசி முகவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி அல்போன்சா மற்றும்  மகள் சௌமியா ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் லாரன்ஸ் சேவியர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்தை அவருக்கு தெரியாமல் விற்றுவிட்டார். இது குறித்து தகவல் தெரிய வந்ததையடுத்து அல்போன்சா தனது கணவர் லாரன்ஸ் சேவியரிடம்  கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த லாரன்ஸ் சேவியர் கடப்பாரையால் அல்போன்சாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அல்போன்சா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் லாரன்ஸ் சேவியரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

SCROLL FOR NEXT