செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி இன்று விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆள்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று விசாரணை நடத்தவுள்ளார்.
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆள்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று விசாரணை நடத்தவுள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம் என நீதிபதி நிஷா பானுவும், ஆள்கொணர்வு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பரத சக்கரவா்த்தி தீர்ப்பு வழங்கினர்.
இதையும் படிக்க | சலார் படத்தின் டீசர் வெளியானது!
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் 3 ஆவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி முன்பு செந்தில் பாலாஜியின் ஆள்கொணர்வு மனு இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது.