முகப்பு
தமிழ்நாடு

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ. 2.14 லட்சம் பறிமுதல்

சென்னை எழிலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ரூ. 2.14 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
எழிலகம்
பகிர்:

சென்னை: சென்னை எழிலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ரூ. 2.14 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.

சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் நீர்வளத்துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் தடுப்பு பிரிவும் இங்கு செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக சீ.பாஸ்கரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த அலுவலகத்தில பணிபுரியும் சிலர் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அந்த அலுவலகத்தில் புதன்கிழமை மாலை திடீரென சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது.

சோதனையின் முடிவில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.2,14,540 பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பாஸ்கரனிடம் விசாரணை செய்தனர்.

பணத்துக்குரிய ஆவணங்கள் வழங்கப்படாமலும், காரணங்கள் சரியாக தெரிவிக்கப்படாமலும் இருந்தால் வழக்குப் பதிவு செய்து  நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →