தமிழ்நாடு

தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம்! உதயநிதி ஸ்டாலின்!!

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:

தஞ்சாவூர் எனக்கு மிகவும் நெருக்கமான மாவட்டம். எனக்கு எவ்வளவு நெருக்கமான மாவட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். நான் அமைச்சராக பொறுப்பேற்று 6 மாத காலமாகின்றன. இந்த 6 மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 4  முறை வந்துள்ளேன்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட தஞ்சாவூருக்கு வந்தேன்.‌ மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இவ்விழாவில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT