முகப்பு
தமிழ்நாடு

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Updated On : 10 ஜூலை 2023, 11:22 am IST
பகிர்:

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகின்ற  250க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் அங்குள்ள கிளை தபால் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். 

அந்த மனுவில், கைத்தறிக்கு என்று ஒதுக்கப்பட்ட ரகங்களை அது நவீன விசைத்தறிகள் மூலம் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்வதால் கைத்தறி சேலைகளின் விற்பனை அதிகப்படியாக குறைந்து அதிக அளவில் சேலைகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

கரை போட்ட வேட்டி, சேலை ரகங்களை தயாரிப்பதற்கான உரிமையை அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஒதுக்கியிருந்தது. ஆனால் அரசு ஊழியர்களின் மெத்தன தன்மையால் தற்போது அதனை விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். 

மீண்டும் அதை கைத்தறி நெசவாளர்களே உற்பத்தி செய்ய வழிவகை செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் காமநாயக்கன்பாளையம் தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அனுப்பும் போராட்டம்  திங்கள்கிழமை நடத்தினர். 

இப்போராட்டத்திற்கு சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கந்தசாமி ஆதரவு தெரிவித்து பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments