முகப்பு
தமிழ்நாடு

பென்னாகரம்: வெள்ளை நிறத்தில் அரியவகை பாம்பு!

சாலைப் பணி மேற்கொள்ளும் போது  குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

Updated On : 10 ஜூலை 2023, 6:11 pm IST
பகிர்:


பென்னாகரம்:  பென்னாகரம் அருகே சாலைப் பணி மேற்கொள்ளும் போது அருகில் இருந்த நீர் குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பென்னாகரம் அருகே கரியம்பட்டி - முதுகம்பட்டி பகுதிகளுக்குச் செல்லக்கூடிய தார் சாலை பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாய்க்கனேரி பகுதியில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சாலையின் அருகே இருந்த நீர் குட்டையில் மிதந்து கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு ஜேசிபி இயந்திரத்தின் அதிக இரைச்சல் மற்றும் மண் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வுகளால் வெளியேறி சாலை அமைக்கும் இடங்களில் ஊர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

Advertisement

Advertisement

சாலையில் ஊர்ந்து சென்ற அரிய நிறப் வெள்ளை நிறப் பாம்பை பணியாளர்கள் செல்லிடை பேசியில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments