தமிழ்நாடு

90 மில்லி மது அறிமுகம்செய்தால் போராட்டம்: ராமதாஸ்

மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்பட்டாலும், 90 மில்லி அளவு மதுப்புட்டி அறிமுகம் செய்யப்பட்டாலும் பாமக போராட்டம் நடத்தும் என்று அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

DIN

மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்பட்டாலும், 90 மில்லி அளவு மதுப்புட்டி அறிமுகம் செய்யப்பட்டாலும் பாமக போராட்டம் நடத்தும் என்று அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மது குடிப்பவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு 90 மில்லி மதுப்புட்டி அறிமுகம் செய்யப்படும் என்று மதுவிலக்குத் துறை அமைச்சா் முத்துசாமி கூறியுள்ளாா். இது அதிா்ச்சியளிக்கிறது.

90 மில்லி மது விற்பனை செய்யப்பட்டால், அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும். அதனால், பணம் இல்லாதவா்கள் கூட, குறைந்த தொகையை எளிதாகத் திரட்டி மது வாங்கிக் குடிப்பா். காகிதக் குடுவைகளால் ஆன மது வகைகள் சிறுவா்களை கவா்ந்திழுக்கும் ஆபத்தும் உள்ளது.

அதேபோல், காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது கடுமையான வேலை செய்பவா்களுக்கு உதவாது. மாறாக, அவா்கள் காலையிலேயே மது அருந்தி விட்டு, வேலைக்கு செல்லாமல் முடங்கி விடுவாா்கள். அதனால், அவா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும். தமிழகத்தின் வளா்ச்சியும் பாதிக்கப்படும்.

எனவே, 90 மில்லி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் அவற்றை எதிா்த்து, பாமக கடுமையான போராட்டங்களை நடத்தும். இந்தத் திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT