முகப்பு
தமிழ்நாடு

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலை பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடல்பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடல்பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டை பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், கியூ பிரிவு போலீஸôர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடிஇலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸôருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, சிறிய ரக சரக்கு வாகனத்திலிருந்து படகில் பீடி இலை பண்டல்களை இறக்கிக்கொண்டிருந்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 1.25 டன் எடையுள்ள மூட்டை பீடி இலை பண்டல்கள், சிறிய ரக சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸார்  பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.